Saturday, December 1, 2012

டிசம்பர் 2, 2012

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
லூக்கா 21:25-28,34-36
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுல கில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தி னால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான் வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமை யோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வரு வதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும் போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களி யாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்ச ரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னி லையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தனது இரண்டாம் வருகையின்போது நிகழ இருப்பவை பற்றி எடுத்துரைக்கிறார். அப்போது "மண்ணுலகில் மக்களினங்கள் என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தி னால் மயக்கமுறுவர்" என்று இயேசு எச்சரிக்கை தருகிறார். குடிவெறி, களியாட்டம் போன்ற கேளிக்கைகளில் நம் மனதை செலுத்தாமல், ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து எப் பொழுதும் தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். வானதூதர்கள் புடைசூழ இயேசுவின் வருகை நிகழப்போவது உண்மை. அப்போது நமது செயல்களுக்காக, ஆண்டவர் முன்னிலை யில் நாம் பதிலளிக்க வேண்டும். குழப்பங்களும், கவலைகளும் சூழ்ந்துள்ள இந்த உலகில், விழிப்பாயிருந்து மன்றாடும்போது ஆண்டவரின் மீட்பை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.