Friday, October 25, 2013

அக்டோபர் 27, 2013

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு
லூக்கா 18:9-14

   அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ் வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள் ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்க ளைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல் லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டு பவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண் ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்." இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற் புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறு வர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, நமது செபத்தில் இருக்க வேண்டிய அடிப்படை பண்பு களைப் பற்றி விளக்குகிறார். உவமையில் வரும் பரிசேயர், கடவுள் முன்னிலையில் தன் னைத் தாழ்த்தாமல் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதைக் காண்கிறோம். மேலும், கடவுளுக்காக பல்வேறு தியாகங்களை செய்வதாகவும் தன்னைப் பற்றி அவர் பெருமை பாராட்டிக் கொள்கிறார். அதே நேரத்தில் வரிதண்டுபவரோ, அடுத்தவர்களைப் பற்றி குறை கூரவில்லை, தன்னைப் பற்றி பெருமை பேசவும் இல்லை. கடவுள் முன்னிலையில் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்த அவர், கடவுளின் இரக்கத்துக்காக மன்றாடுகிறார். எனவே, பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற் புடையவராகி வீடு திரும்பினார் என இயேசு கூறுகிறார். நாமும் கடவுள் முன்னிலையில் நம்மைத் தாழ்த்தும்போது, அவரால் உயர்த்தப் படுவதை உணர முடியும்.

Friday, October 18, 2013

அக்டோபர் 20, 2013

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
லூக்கா 18:1-8

   அக்காலத்தில் சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந் தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந் தார். அவர் நடுவரிடம் போய், 'என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்ப வில்லை. பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டே யிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.''
   பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்து வாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னம்பிக்கையுடன் நீதிக்காக போராடிய ஒரு கைம் பெண்ணைப் பற்றிய உவமையை எடுத்துரைக்கிறார். இயேசுவின் காலத்திய யூத சமூகத்தில் கைம்பெண்கள் மதிப்பற்றவர்களாக கருதி ஒதுக்கப்பட்டனர். அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமே முன்வரவில்லை. இப்படி கைவிடப்பட்ட ஒரு பெண், கடவுளுக்கு அஞ்சாத நேர்மை யற்ற ஒரு நடுவரிடம் தனது வழக்கை முடித்து தருமாறுக் கோருகிறார். நடுவர் காலம் தாழ்த்தினாலும், வேறு வழியில்லை என்பதால் அந்த கைம்பெண் அவரை விடாது தொந்தரவு செய்கிறார். அதைப் பொறுக்க முடியாமல் நடுவர் நீதி வழங்க முடிவு செய்வதாக இயேசு குறிப்பிடுகிறார். இந்த நேர்மையற்ற நடுவரைக் காட்டிலும், நம் தேவைகளை நிறைவேற்று வதில் கடவுள் ஆர்வம் கொண்டிருக்கிறார் என இயேசு விளக்குகிறார். எனவே கால தாமத மானாலும் உறுதியான நம்பிக்கையோடு செபித்தால், கடவுள் நமக்கு நீதி வழங்குவதைக் காண முடியும்.

Friday, October 11, 2013

அக்டோபர் 13, 2013

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
லூக்கா 17:11-19

   அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண் டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழு நோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, "ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்க ளைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார்.
    அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்தி ருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பத்து தொழுநோயாளர்களை குணமாக்குகிறார். சமாரிய எல்லையில் தங்கியிருந்த இந்த தொழுநோயாளர்கள், அவ்வழி யாக பயணம் செய்த இயேசுவைக் கண்டு உதவி கோருகிறார்கள். அவர்களது நம்பிக்கையை கண்ட இயேசு, பத்து பேரின் தொழுநோயையும் குணப்படுத்துகிறார். சமூகத்தில் நுழையச் சென்ற வழியில் தொழுநோயாளர்கள் குணம் பெற்றார்கள். தொழுநோயாளர்களில் ஒன்பது பேர் யூதர்கள். அவர்கள் குருக்களிடம் தங்களைக் காட்டி சமூகத்தில் மீண்டும் இணைவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால் சமாரியரான இறுதி நபரோ, தான் குணமாக காரணமான இயேசுவைக் காணத் திரும்பிச் செல்கிறார். அவர் இயேசுவின் காலில் முகங் குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார் என நற்செய்தி கூறுகிறது. நாம் கடவுளின் இரக்கத்தையும், குணமளிக்கும் அன்பையும் முழுமையாக உணர்ந்து கொள்ளும்போது அவ ருக்கு நன்றியுள்ளவர்களாய் திகழ முடியும்.

Friday, October 4, 2013

அக்டோபர் 6, 2013

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
லூக்கா 17:5-10

   அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். உங்கள் பணியா ளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல் வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல் வாரா? மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும் வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வா ரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கையால் நாம் எவ்வளவு நன்மைகளைப் பெற முடியும் என்று கற்றுத் தருகிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நிலத் தில் நிற்கும் மரத்தை கடலில் வேரூன்றி நிற்கச் செய்ய முடியும் என்று இயேசு கூறுகிறார். நமது நம்பிக்கை மூலம் நாம் நற்செய்திக்கு சான்று பகர அழைக்கப்படுகிறோம். நற்செய்தி பணி என்பது கடவுளின் பரிசையும், பணத்தையும் பெறுவதற்காக செய்யப்படும் பணியல்ல, நமது கடமை என்று இயேசு கற்பிக்கிறார். கடவுளுக்கு முன்பு நாம் பயனற்ற பணியாளர்கள் என்பதை உணர ஆண்டவர் நம்மை அழைக்கிறார். பலனை எதிர்பாராமல் கடவுளின் நம்பிக் கைக்குரிய பணியாளர்களாக நாம் செயல்படும்போது, கடுகளவு நம்பிக்கை மூலம் மிகப் பெரிய அற்புதங்களைக் காண முடியும்.