Friday, May 24, 2013

மே 26, 2013

மூவொரு இறைவன் பெருவிழா
யோவான் 16:12-15

   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்து வார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட் பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறி விப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறி விப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப் பார்'" என்றேன்.

சிந்தனை:
  இன்றைய நற்செய்தியில் இயேசு, மூவொரு இறைவனின் செயல்பாட்டை விளக்குகிறார். தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார். தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆட்களாக தம்மை வெளிப்படுத்தும் ஒரே இறைவன், மனித உருவில் தோன்றிய இயேசு வழியாக நமக்கு மீட்பு அளித்துள்ளார். மனித அறிவுக்கு புலப்படாத மாபெரும் மறைபொருளாக விளங் கும் மூவொரு இறைவனில் முழுமையான நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையால், கடவுளின் நிறைமாட்சியில் நாம் பங்குபெற முடியும்.

Friday, May 17, 2013

மே 19, 2013

தூய ஆவியாரின் வருகை பெருவிழா
யோவான் 14:15-16,23-26

   அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற் றொரு துணையாளரை உங்களுக்கு தருமாறு நான் தந்தை யிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடை யவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடை யவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத் தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, துணையாளராம் தூய ஆவியாரைப் பற்றி தம் சீடருக்கு கற்றுக் கொடுக்கிறார். தூய ஆவியாரின் தூண்டுதலால் நாம் தந்தையிடமும், மகனிடமும் அன்புகொள்ள கற்றுக் கொள்கிறோம். நாம் இறைவனை அன்பு செய்யும்போது, அவர் நம்மில் வந்து குடிகொள்வார். தூய ஆவியாரின் வருகையால் திருச்சபை தோன்றிய பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். தனது பெயரால் தந்தை அனுப்பும் துணையாளராம் தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் என்று ஆண்டவர் உறுதி அளித்திருக் கிறார். கிறிஸ்து கூறிய அனைத்தையும் நமக்கு நினைவூட்டும் தூய ஆவியாரின் செயலை நம்மில் அனுமதிக்கும்போது, இயேசுவைப் பற்றிய  உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் நாம் வாழ முடியும்.

Friday, May 10, 2013

மே 12, 2013

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா
லூக்கா 24:46-53

   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 'பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடு களிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங் கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப் படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்'' என்றார்.
   பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்க ளுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கி விட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி இயேசு விண்ணேற்றம் அடைந்த நிகழ்வை நமக்கு எடுத்துரைக்கிறது. சிலுவை மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்த இயேசு, தனது இறைத்தன்மையை சீடர்கள் உணரும் வகையில் நாற்பது நாட்கள் அவர்களுக்கு காட்சி அளிக்கிறார். இறுதியாக இயேசு விண்ணகம் செல்லும் முன் துணையாளராம் தூய ஆவியாரை சீடர்களுக்கு வாக்களிக்கிறார். கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்ற தூய ஆவியாரின் வல்லமை தேவைப்படுகிறது. உன்னத கடவுளிடம் இருந்து வரும் தூய இந்த வல்லமையைப் பெறுவதற்காக சீடர்கள் எருசலேம் நகரத்திலேயே இருக்குமாறு இயேசு பணிக்கிறார். கடவுளின் திட்டம் நம்மில் நிறைவேற வேண்டுமானால், நாம் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை இயேசு இங்கு கற்றுத் தருகிறார். விண்ணேற்றம் அடைந்த கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்றுவதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் அவரது உண்மையான சாட்சிகளாக வாழ முடியும்.

Friday, May 3, 2013

மே 5, 2013

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு
யோவான் 14:23-29

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பது இல்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னு டையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடை யவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்க ளுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அமை தியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதி யையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 'நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னை விடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழும் முன்பே, சொல்லிவிட்டேன்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களுக்கு அமைதியை அளிக்கிறார். அவர் தரும் அமைதி, உலகம் தரும் அமைதியை விட மிகவும் மேலானது. விண்ணகத் தந்தையிடம் திரும்பிச் செல்லும் முன் இயேசு இந்த அமைதியின் வாக்குறுதியை அளிக்கிறார். துணை யாளராம் தூய ஆவியாரின் வழியாக அமைதி என்னும் கனி நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு கீழ்ப்படிவதன் மூலம் நம் ஆண்டவரின் அன்பு கட்டளை களில் நிலைத்திருந்து, அமைதியின் இனிமையை சுவைக்க நாம் அனைவரும் அழைக்கப் படுகிறோம். ஆண்டவரின் வார்த்தைகளை கடைபிடித்து வாழ்வதன் வழியாக, இறைத்தந்தை யின் மீதான அன்பை வெளிப்படுத்த கிறிஸ்து இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் போதனைகளில் வெளிப்படும் ஆண்டவரின் வார்த்தைகளை, கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் இறைவன் உறையும் ஆலயமாக மாற முடியும்.