Friday, June 22, 2012

ஜூன் 24, 2012

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா
லூக்கா 1:57-66,80

   எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டு சுற்றி வாழ்ந் தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
   எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல் லையே'' என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிட லாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந் தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
   குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்க ளுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு முன்னோடியாகவும், கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுபவராகவும் யோவான் பிறந்தார். ஆண்டவரின் வழியை செம் மைப்படுத்தும் சிறந்த இறைவாக்கினராக செயல்பட, தாயின் கருவில் இருக்கும்போதே அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். யோவானின் சொல்லும், செயலும் மக்களை கடவுளை நோக்கி வழிநடத்தின. கடவுளின் பணிக்காக அழைக்கப்பட்டுள்ள நாமும், யோவானைப் பின் பற்றி மனத்தூய்மையுடன் வாழும்போது மற்றவர்களுக்கு உண்மை கடவுளை சுட்டிக்காட்டு பவர்களாக செயலாற்ற முடியும்.

Friday, June 15, 2012

ஜூன் 17, 2012

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு
மாற்கு 4:26-34

   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறி யது: "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிட லாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர் கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது'' என்று கூறினார்.
   மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும் பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்ட பின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்'' என்று கூறினார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர் களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையாட்சியின் தன்மையை உணர்த்தும் இரண்டு உவமைகளைத் தருகிறார். தானாகவே முளைத்து வளரும் சில பயிர்களைப் போன்று தாமாகவே கடவுளைத் தேடிவரும் மனிதர்களாலும், கடுகு விதையைப் போன்று இறைவனே நட்டு வளர்க்கும் திருச்சபையாலும் இறையாட்சி வளர்ச்சி அடைகிறது என்பதை இந்த உவமைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருச்சபையின் மக்களாக இருக்கும் நாம், கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நன்மைகள் செய்து வாழும்போது இறையாட்சியின் தூதுவர்களாக விளங்க முடியும்.

Friday, June 8, 2012

ஜூன் 10, 2012

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா
மாற்கு 14:12-16,22-26

   புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இரு வரை அனுப்பினார்: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல் லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்கு செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமை யாளரிடம், "'நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய் யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத் தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
   அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறை யாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒரு போதும் குடிக்கமாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

சிந்தனை:
   கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் நம் ஆண்டவரின் திருஉடலும், திரு இரத்தமும் அவரது இறைப்பிரசன்னமும் அடங்கியுள்ள ஒப்பற்ற மறையுண்மையை இன்று நாம் கொண்டாடுகிறோம். உலகமே கொள்ள முடியாத இறைவன், தன்னை உணவின் வடி விலே தந்திருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். நம் கண்ணுக்கு புலப்படாததாக இந்த நற் கருணை மறைபொருள் இருந்தாலும், இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகை யில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மை. நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழும்போது, நற்கருணை நாதருக்கு நாம் உண்மையாக சான்றுபகர முடியும்.

Friday, June 1, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா
மத்தேயு 28:16-20

   அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென் றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகி லும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்க ளினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவி யார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

சிந்தனை:
  ஒரே கடவுள், மூன்று இறையாட்களாக செயல்படுகிறார் என்ற மாபெரும் மறைபொருளை இன்று நாம் கொண்டாடுகிறோம். மனித உடலெடுத்து நம்மோடு வாழ்ந்த இறைமகன் இயேசுவே இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். மனிதரின் சாதாரண அறிவுக்கு புரியவில்லை என்பதால், நாம் இதை மறுக்க முடியாது. கடவுள் நமது அறிவுக்கு அப்பாற்பட்டவர். தந்தை, மகன், தூய ஆவியார் என்று செயலாற்றும் மூவொரு இறைவ னுக்கு உண்மையுள்ளவர்களாக வாழும்போது, நாம் அவரது பிள்ளைகளாக மாற முடியும்.