Friday, October 26, 2012

அக்டோபர் 28, 2012

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

மாற்கு 10:46-52
   இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகி றார் என்று அவர் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், 'தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப் பிட்டு, 'துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், 'ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்' என்றார். இயேசு அவரிடம், 'நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கண் தெரியாத பிச்சைக்காரருக்கு பார்வை அளிப்பதைக் காண்கிறோம். அவர் இயேசுவின் வல்ல செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், அவர் தனக்கு பார்வை அளிக்க முடியும் என்று பர்த்திமேயு நம்பினார். இயேசு யாருக்கு அற்புதம் செய்தார் என்பதை அறியவில்லை என்றாலும், அவர் தனக்கும் பார்வையளிப்பார் என்று பர்த்திமேயு முழுமையாக நம்பினார். அவரது நம்பிக்கை மனதளவில் மட்டும் நின்று விடவில்லை. எனவே தான் அமர்ந்திருந்த வழியில் இயேசு செல்கிறார் என்பதை அறிந் ததும், 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று அபயக் குரல் எழுப்புகிறார். இயேசுவும் பர்த்திமேயுவின் நம்பிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அவரை அருகில் அழைத்து அவருக்கு பார்வை அளிக்கிறார். நாமும் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு, ஆண்டவரின் உதவியை நாடுகின்றபோது அவரது இரக்கத்தையும் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும். 

Friday, October 19, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
மாற்கு 10:35-45
   அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்பு கிறோம்'' என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, "நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கி றீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர் களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திரு முழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும் படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
   இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தலைமைப் பண்பைப் பற்றி எடுத்துரைப்பதைக் காண் கிறோம். திருத்தூதர்கள் எப்பொழுதும் இயேசுவின் அரசாட்சியைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தார்கள். அவர் உரோமையரை விரட்டிவிட்டு இஸ்ரயேலின் ஆட்சியைக் கைப் பற்றப் போகிறார் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதே மனநிலையில்தான் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகுகிறார்கள். அவரது அரசில் தங்களுக்கு முக்கிய பதவி வேண்டுமென்று கேட்கிறார்கள். இதனால், இந்த இருவர் மீதும் மற்ற சீடர்கள் கோபம் கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்தவராய், பதவியைப் பற்றிய தெளிவை திருத்தூதர்களுக்கு வழங்குகிறார். பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராகவும், முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் பணியாள ராகவும் இருக்க வேண்டுமென அவர் கற்பிக்கிறார். இயேசுவைப் பின்பற்றி, தொண்டு ஆற்று வதற்கும் பலருடைய மீட்புக்காக நமது வாழ்வை அர்ப்பணம் செய்வதற்கும் நாம் தயாராகும் போது, இயேசுவின் ஆட்சியை இந்த உலகில் நிறுவ முடியும். 

Friday, October 12, 2012

அக்டோபர் 14, 2012

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
மாற்கு 10:17-30
  அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த போது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள் படியிட்டு, "நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக் கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவ ரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல் லவா? 'கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக் காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'' என்றார். அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
   இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படு வது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடு களையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளை களையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுக ளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்வதைப் பற்றி கேள்வி எழுப்புவதைக் காண்கிறோம். பிற ருக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தும் கட்டளைகளை கடைபிடிக்கு மாறு அவரிடம் இயேசு கூறுகிறார். தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடித்து வருவ தாக இளைஞர் கூறியதும், அதற்கும் மேலான ஒன்றை செய்யுமாறு இயேசு கூறுகிறார்; அவரிடம் உள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடுக்குமாறு பணிக்கிறார். ஒருவரிடம் இருக் கின்ற செல்வத்தின் அளவு அதிகரிக்கும்போது, பிறருக்கு உதவ வேண்டிய பொறுப்பும் அதி கரிக்கிறது என்பதை இயேசு இங்கு சுட்டிக் காட்டுகிறார். கடவுளுக்காக நாம் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டுமென இயேசு அழைப்பு விடுக்கிறார். உலக இன்பங்களை புறக்கணித்து, ஆண்டவருக்காக சில இன்னல்களை ஏற்றுக்கொள்ளும்போது நாம் நிலைவாழ் வினை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.  

Friday, October 5, 2012

அக்டோபர் 7, 2012

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
மாற்கு 10:2-16
   அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொ ழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார். அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றி தழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித் துள்ளார்'' என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களி டம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக் கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத் திலேயே கடவுள், 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட் டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவ ரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார். பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.
   சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளா தோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கணவன் மனைவியிடம் இருக்க வேண்டிய ஒன்றிப்பைப் பற்றி பேசுகிறார். கணவனும் மனைவியும் அன்புடன் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொண்டு வாழும்போது திருமண உறவில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மனைவியை விலக்கிவிட்டு வேறு மணம் புரியும் கணவனும், கணவனை விலக்கிவிட்டு வேறு மணம் புரியும் மனைவி யும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று இயேசு கடுமையாகச் சாடுகிறார். பிரிவை அல்ல, ஒன்றிப்பையே கடவுள் விரும்புகிறார். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக் கட்டும். சிறு பிள்ளைகளைப் போன்று மன்னித்து மறக்கும் உள்ளத்துடன் வாழும்போது, இல்லறத்தை மட்டுமல்ல, இறையாட்சியையும் நம்மால் கட்டியெழுப்ப முடியும்.