Friday, August 23, 2013

ஆகஸ்ட் 25, 2013

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

லூக்கா 13:22-30

   அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித் துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப் பொழுது ஒருவர் அவரிடம், "ஆண்டவரே, மீட்புப் பெறு வோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். 'வீட்டு உரிமையா ளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, 'நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், 'நாங் கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ எனக் குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறை யாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற் கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இடுக்கமான வாயில் வழியாக வருந்தி நுழைய அழைப்பு விடுக்கிறார். பேராசை, சுயநலம் போன்ற தீமைகளின் மூட்டைகளை சுமந்துகொண்டு செல் லும்போது, நமக்கு பெரிய வாயில் தேவைப்படுகிறது. அத்தகைய வாயில் வழியாக நாம் நுழைந்தால், அது நம்மை அழிவுக்கு கொண்டு செல்லும். தீமைகளை விடுத்து நன்மை செய் வோராய் வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். கடவுளின் விருப்பத் துக்கு நம்மை முழுமையாக கையளித்து குழந்தைகளைப் போன்ற எளிய மனநிலையில் வாழும்போது, நாம் இடுக்கமான வாயில் வழியாக நுழைய முடியும். இயேசுவை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் அந்த வாயிலில் நுழைந்தால், ஆண்டவர் தரும் வாழ்வை நாம் பெற்றுக்கொண்டு இறையாட்சிப் பந்தியில் முதன்மையானவர்களாய் அமர முடியும்.

Friday, August 16, 2013

ஆகஸ்ட் 18, 2013

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
லூக்கா 12:49-53

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக் குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்ப டுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந் திருப்பர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையன்புத் தீயை மண்ணுலகில் மூட்ட வந்ததாக கூறுகிறார். கிறிஸ்தவர்கள் அனைவரின் இதயமும் இறையன்புத் தீயில் பற்றியெரிய வேண் டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். கிறிஸ்துவின் சீடர்கள் உலகப் போக்கின்படி வாழாமல், இறைவனுக்கு உகந்தவர்களாய் தனித்தன்மையுடன் வாழ அழைப்பு பெற்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் கிறிஸ்துவுக்காக வாழ, உலகத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறோம். நம் விசுவாசத்தைக் காக்க பெற்றோரையும் பிள்ளைகளையும் எதிர்க்க நேரிட் டாலும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என்பதே இயேசு இன்று நமக்கு தரும் அழைப்பு. இதனால் குடும்பத்திலும் சமூகத்திலும், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோரும், நம்பிக்கை கொள்ளாதோரும் பிரிந்திருப்பர் என்பதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்து மூட்டிய இறையன்புத் தீ நம்மில் பற்றியெரிந்தால், அவர் மீதான நம்பிக்கையில் உறுதியாய் இருந்து நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Friday, August 9, 2013

ஆகஸ்ட் 11, 2013

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
லூக்கா 12:32-48

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணு லகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக் கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாள ருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.''
   அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: "தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண் டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகி களுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடி படுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல் படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதி யாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப் படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, வீட்டுப் பொறுப்பாளரான கடவுளுக்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். தம் தலைவர் திரும்பி வந்து தட்டும் போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் விழிப்புடன் காத்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். விண்ணகத்தில் வாழும் நம் தலைவராகிய இயேசு, மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது அவரை வரவேற்க விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழ நாம் அழைக்கப் படுகிறோம். "தலைவர் வரக் காலந்தாழ்த்துவார்" என உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, உலகு சார்ந்த தீமையான செயல்களில் நாம் ஈடுபட்டால், எதிர்பாராத நேரத்தில் வரும் நம் தலைவ ரால் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டு நம்பிக்கைத் துரோகிகளுக்குரிய இடத்திற்குத் தள்ளப் படுவோம் என்ற எச்சரிக்கை நமக்குத் தரப்படுகிறது. நம் தலைவர் நமக்குத் தந்த பணியை அர்ப்பண உணர்வுடன் செய்தால், அவர் வந்து நம்மைப் பந்தியில் அமரச் செய்து, நமக்கு பணி விடை செய்வதைக் காண முடியும்.

Friday, August 2, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு
லூக்கா 12:13-21

   அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக் கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதி யான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார்.
   அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: "செல் வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந் தது. அவன், 'நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில் லையே!' என்று எண்ணினான். 'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, 'என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல் வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவ ராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உலகப் பொருட்கள் மீது பற்று வைக்காமல் கடவுள் முன்னிலையில் செல்வம் மிகுந்தோராய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு தன் பொதுவாழ்வில் பல்வேறு ஆன்மீக, சமயம் சார்ந்த கேள்விகளுக்கு விடை அளிப்பதைக் காண்கிறோம். இயேசுவின் திறமையைக் கண்ட ஒருவர், அவரது சொத்து பிரச்சனையில் தலையிடுமாறு இயேசுவுக்கு அழைப்பு விடுக்கிறார். விண்ணரசைப் பற்றி போதிக்க வந்த இயேசு, மண்ணக சொத்துக்களில் பற்று வைக்க வேண்டாம் என்ற போதனையை வழங்கு கிறார். சேர்த்து வைக்கவும் இடம் இல்லாத அளவுக்கு அதிக விளைச்சலை காண்கிறது ஒரு செல்வனின் நிலம். அவன் அதைக் கொண்டு, பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம் எனத் திட்டமிடுகிறான். ஆனால் வாழ்க்கை அவன் கையில் இல்லை, கடவுளின் திட்டப்படி அவன் உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என இயேசு கூறுகிறார். எனவே உலக செல்வங்கள் மீது பற்று கொள்ளாமல் நன்மை செய்பவர்களாய் வாழும்போது, கடவுள் முன்னிலையில் செல் வம் உடையவர்களாய் திகழ முடியும்.