Friday, November 23, 2012

நவம்பர் 25, 2012

கிறிஸ்து அரசர் பெருவிழா
யோவான் 18:33-37
   அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், "நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?'' என்று கேட் டார். அதற்குப் பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்ற தாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக்கொடுக் கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார். பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற் காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, பிலாத்துவின் முன்னிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளா னவராய் நிற்கிறார். அனைத்துலகின் அரசரான அவர் ஒரு சாதாரண ஆளுநர் முன்பு கைகள் கட்டுண்டவராய், மரண தண்டனைக்குரிய கைதியாய் நிறுத்தப்பட்டிருக்கிறார். இயேசுவிடம் குற்றம் எதையும் காண முடியாத பிலாத்து, அவரைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறான். "நீ யூதரின் அரசனா?'' என்பது அவனது கேள்வி. "உண்மையை எடுத்துரைப் பதே என் பணி" என்பது இயேசுவின் பதில். கடவுளைப் பற்றிய உண்மையைத் தன்னில் வெளிப்படுத்துபவராக இயேசு வந்தார். நம் அரசர் இயேசுவின் குரலுக்கு செவிசாய்ப்பவர் களாய் திகழும்போது, உண்மையைச் சார்ந்தவர்களாக நாம் வாழ முடியும்.