Friday, November 22, 2013

நவம்பர் 24, 2013

கிறிஸ்து அரசர் பெருவிழா
லூக்கா 23:35-43
   அக்காலத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டி ருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியா ளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியா வும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடு வித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர். "இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகி றோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, மனிதகுலத்தின் மீட்புக்காக சிலுவையில் தொங்கும் அரசராக காட்சி அளிக்கிறார். இயேசுவின் அரசத்தன்மையைப் புரிந்துகொள்ளாத ஆட்சியாளர் களும், மக்களும் அவரை ஏளனம் செய்கிறார்கள். இயேசு உண்மையான அரசர் என்றால் சிலுவை மரணத்தில் இருந்து தப்பி வருமாறு அவர்கள் எள்ளி நகையாடுகின்றனர். அதிகா ரத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கள்வனும் இயேசு வைக் கேலி செய்கிறதை இங்கு காண்கிறோம். அந்த நேரத்தில்தான், மற்றொரு கள்வன் அவனைக் கடிந்துகொண்டு இயேசுவின் மாசின்மையை எடுத்துரைக்கிறான். மேலும் அவர் ஆட்சியுரிமையுடன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையையும் அறிக்கையிடுகிறான். அத னால் இயேசு அவனுக்கு அன்றே விண்ணகத்தைப் பரிசளித்தார். நாமும் இயேசுவின் அரசுக்கு சான்று பகர்பவர்களாய் வாழும்போது, பேரின்ப வீட்டை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.

Friday, November 15, 2013

நவம்பர் 17, 2013

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

லூக்கா 21:5-19

   அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டி ருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களா லும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'' என்றார். அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங் கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, 'நானே அவர்' என்றும், 'காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெ னில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். இவை அனைத் தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங் களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரச ரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப் பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வை காத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, ... முடியும்.

Friday, November 8, 2013

நவம்பர் 10, 2013

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு
லூக்கா 20:27-38

   அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசே யர் இயேசுவை அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோத ரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்த னர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்த னர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு சதுசேயரிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர் களே'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உயிர்த்தெழுதலுக்குப் பிந்திய வாழ்வைப் பற்றி நமக்கு கற்பிக்கிறார். இயேசுவை இக்கட்டுக்கு ஆளாக்கும் நோக்குடன் சதுசேயர்கள் சிலர் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். தாங்கள் மறைநூலில் தேர்ந்தவர்கள் என்பதைக் காட்டு வதற்காக மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். உயிர்த் தெழுதல் இல்லை என இயேசுவின் வாயில் இருந்தே மக்களுக்கு மெய்ப்பித்துவிடலாம் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் மோசேயின் வாழ்க்கை நிகழ்வைக் கொண்டே அவர்கள் வாதம் தவறு என இயேசு விடை அளிக்கிறார். ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் கடவுளாகிய ஆண்டவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். உயிரும் உயிர்ப்புமான இயேசுவில் முழு நம்பிக்கை வைக்கும்போது, நாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.

Friday, November 1, 2013

நவம்பர் 3, 2013

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

லூக்கா 19:1-10

   அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டு வோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற் காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற் றார். இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்'' என்று முணு முணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைக ளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந் திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக் கிறார்'' என்று சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி, சக்கேயுவின் வாழ்வில் இயேசு மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட சக்கேயு அவரைக் காண ஆவல் கொள்கிறார். மக்கள் கூட்டம் இயேசுவை சூழ்ந்திருந்ததும், சக்கேயு குள்ளமாக இருந்த தும் இயேசுவைக் காண சக்கேயுவுக்கு தடையாக இருந்தன. ஆனாலும் இயேசுவைக் காண் பதில் உறுதியாக இருந்த சக்கேயு சிறுபிள்ளைப் போன்று காட்டு அத்தி மரத்தின் மீது ஏறி இயேசுவைக் காணக் காத்திருக்கிறார். கடவுளைக் காண நாம் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டு கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். தன்னை ஆவலோடு தேடிய சக்கேயுவை இயேசு பெயர் சொல்லி அழைக்கிறார். அவரோடு விருந்துண்ண செல்கிறார். சக்கேயுவின் வாழ்வில் இயேசு நுழைந்ததும் அவரிடம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. நாமும் கடவுளை ஆவலு டன் தேடி, அவரை நம் வாழ்வில் நுழைய அனுமதிக்கும்போது, அவர் தரும் மீட்பைப் பெற் றுக்கொள்ள முடியும்.