Sunday, December 1, 2013

டிசம்பர் 1, 2013

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
மத்தேயு 24:37-44
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக்கும். வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திரு மணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல் லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்ப டியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற் றவர் விட்டுவிடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத் துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப் பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரி யாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாள ருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத் தில் மானிடமகன் வருவார்."

சிந்தனை:
   இன்று நாம் புதிய திருவழிபாட்டு ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்றைய நற் செய்தியில் இயேசு, தனது இரண்டாவது வருகையைப் பற்றி சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார். மக்கள் பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் வேளையில், ஆண்டவர் திடீரென தோன்றுவார் என்ற எச்சரிக்கை நமக்கு தரப்படுகிறது. அவரது வருகை நிகழும் நேரம் தெரியாது என்பதால், எப்பொழுதும் அவரை எதிர்கொள்ள எப்பொழுதும் நாம் தயாராய் இருக்குமாறு அழைக்கப் படுகிறோம். ஆண்டவரின் அரசில் பங்கேற்பதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஒருவராக இருக்க, எப்பொழுதும் நம்மைத் தயாரித்து வாழ வேண்டும் என்பதே இயேசு நமக்கு தரும் அறிவுரை. ஆண்டவரின் நெறியில் உண்மையுடன் நடந்தால், நினையாத நேரத்தில் வரும் மானிடமகனை நாம் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.