Friday, November 22, 2013

நவம்பர் 24, 2013

கிறிஸ்து அரசர் பெருவிழா
லூக்கா 23:35-43
   அக்காலத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டி ருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியா ளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியா வும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடு வித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர். "இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகி றோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, மனிதகுலத்தின் மீட்புக்காக சிலுவையில் தொங்கும் அரசராக காட்சி அளிக்கிறார். இயேசுவின் அரசத்தன்மையைப் புரிந்துகொள்ளாத ஆட்சியாளர் களும், மக்களும் அவரை ஏளனம் செய்கிறார்கள். இயேசு உண்மையான அரசர் என்றால் சிலுவை மரணத்தில் இருந்து தப்பி வருமாறு அவர்கள் எள்ளி நகையாடுகின்றனர். அதிகா ரத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கள்வனும் இயேசு வைக் கேலி செய்கிறதை இங்கு காண்கிறோம். அந்த நேரத்தில்தான், மற்றொரு கள்வன் அவனைக் கடிந்துகொண்டு இயேசுவின் மாசின்மையை எடுத்துரைக்கிறான். மேலும் அவர் ஆட்சியுரிமையுடன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையையும் அறிக்கையிடுகிறான். அத னால் இயேசு அவனுக்கு அன்றே விண்ணகத்தைப் பரிசளித்தார். நாமும் இயேசுவின் அரசுக்கு சான்று பகர்பவர்களாய் வாழும்போது, பேரின்ப வீட்டை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.