Friday, October 25, 2013

அக்டோபர் 27, 2013

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு
லூக்கா 18:9-14

   அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ் வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள் ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்க ளைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல் லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டு பவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண் ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்." இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற் புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறு வர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, நமது செபத்தில் இருக்க வேண்டிய அடிப்படை பண்பு களைப் பற்றி விளக்குகிறார். உவமையில் வரும் பரிசேயர், கடவுள் முன்னிலையில் தன் னைத் தாழ்த்தாமல் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதைக் காண்கிறோம். மேலும், கடவுளுக்காக பல்வேறு தியாகங்களை செய்வதாகவும் தன்னைப் பற்றி அவர் பெருமை பாராட்டிக் கொள்கிறார். அதே நேரத்தில் வரிதண்டுபவரோ, அடுத்தவர்களைப் பற்றி குறை கூரவில்லை, தன்னைப் பற்றி பெருமை பேசவும் இல்லை. கடவுள் முன்னிலையில் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்த அவர், கடவுளின் இரக்கத்துக்காக மன்றாடுகிறார். எனவே, பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற் புடையவராகி வீடு திரும்பினார் என இயேசு கூறுகிறார். நாமும் கடவுள் முன்னிலையில் நம்மைத் தாழ்த்தும்போது, அவரால் உயர்த்தப் படுவதை உணர முடியும்.