Friday, November 1, 2013

நவம்பர் 3, 2013

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

லூக்கா 19:1-10

   அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டு வோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற் காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற் றார். இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்'' என்று முணு முணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைக ளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந் திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக் கிறார்'' என்று சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி, சக்கேயுவின் வாழ்வில் இயேசு மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட சக்கேயு அவரைக் காண ஆவல் கொள்கிறார். மக்கள் கூட்டம் இயேசுவை சூழ்ந்திருந்ததும், சக்கேயு குள்ளமாக இருந்த தும் இயேசுவைக் காண சக்கேயுவுக்கு தடையாக இருந்தன. ஆனாலும் இயேசுவைக் காண் பதில் உறுதியாக இருந்த சக்கேயு சிறுபிள்ளைப் போன்று காட்டு அத்தி மரத்தின் மீது ஏறி இயேசுவைக் காணக் காத்திருக்கிறார். கடவுளைக் காண நாம் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டு கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். தன்னை ஆவலோடு தேடிய சக்கேயுவை இயேசு பெயர் சொல்லி அழைக்கிறார். அவரோடு விருந்துண்ண செல்கிறார். சக்கேயுவின் வாழ்வில் இயேசு நுழைந்ததும் அவரிடம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. நாமும் கடவுளை ஆவலு டன் தேடி, அவரை நம் வாழ்வில் நுழைய அனுமதிக்கும்போது, அவர் தரும் மீட்பைப் பெற் றுக்கொள்ள முடியும்.