Friday, October 18, 2013

அக்டோபர் 20, 2013

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
லூக்கா 18:1-8

   அக்காலத்தில் சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந் தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந் தார். அவர் நடுவரிடம் போய், 'என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்ப வில்லை. பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டே யிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.''
   பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்து வாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னம்பிக்கையுடன் நீதிக்காக போராடிய ஒரு கைம் பெண்ணைப் பற்றிய உவமையை எடுத்துரைக்கிறார். இயேசுவின் காலத்திய யூத சமூகத்தில் கைம்பெண்கள் மதிப்பற்றவர்களாக கருதி ஒதுக்கப்பட்டனர். அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமே முன்வரவில்லை. இப்படி கைவிடப்பட்ட ஒரு பெண், கடவுளுக்கு அஞ்சாத நேர்மை யற்ற ஒரு நடுவரிடம் தனது வழக்கை முடித்து தருமாறுக் கோருகிறார். நடுவர் காலம் தாழ்த்தினாலும், வேறு வழியில்லை என்பதால் அந்த கைம்பெண் அவரை விடாது தொந்தரவு செய்கிறார். அதைப் பொறுக்க முடியாமல் நடுவர் நீதி வழங்க முடிவு செய்வதாக இயேசு குறிப்பிடுகிறார். இந்த நேர்மையற்ற நடுவரைக் காட்டிலும், நம் தேவைகளை நிறைவேற்று வதில் கடவுள் ஆர்வம் கொண்டிருக்கிறார் என இயேசு விளக்குகிறார். எனவே கால தாமத மானாலும் உறுதியான நம்பிக்கையோடு செபித்தால், கடவுள் நமக்கு நீதி வழங்குவதைக் காண முடியும்.