Friday, September 27, 2013

செப்டம்பர் 29, 2013

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
லூக்கா 16:19-31

   அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது: "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
   செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதா ளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனி யைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இய லாது' என்றார்.
   அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக் கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, பிறர்நலம் பேணும் சகோதர சகோதரிகளாக செயல்பட்டு நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். உவமையில் வரும் செல் வரைப் போன்று, அருகில் துன்புறுவோரை கண்டும் காணாமல் வாழும் மனநிலையைக் கைவிட நாம் அழைக்கப்படுகிறோம். லாசர் ஏழையாய் இருந்தும், செல்வரின் மேசையில் இருந்து விழும் உணவுத் துண்டுகளால் பசியாற்றினாலும் அவற்றை சில நாய்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார். ஆகவே, அவர் இறந்ததும் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார். உடல் முழுவதும் புண்களுடன் ஒரு ஏழை தன் வீட்டு வாயில் அருகே இருப்பதைக் கண்டும், அவருக்கு உதவ செல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைக் காண்கிறோம். ஆத லால், அவர் பாதாளத்தில் வேதனையை அனுபவிக்கிறார். நம்மிடம் மிகுதியாக இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக வானக வீட்டில் நுழைய முடியும்.