Friday, September 6, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
லூக்கா 14:25-33

   அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர் களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரை யும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதி னால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட் டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலை யில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியை தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தம்மைப் பின்பற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதிகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் உலகு சார்ந்த எதன் மீதும் நாம் பற்று வைக்கக்கூடாது என்பதே அவரது முதல் அறிவுரை. உறவுகளையும், உடைமை களையும் மட்டுமல்ல நம் உயிரையும் இழக்கத் தயாராக இருந்தால் மட்டுமே நாம் இயேசு வைப் பின்பற்றும் தகுதியைப் பெற முடியும். இங்கு சீடத்துவ வாழ்வின் பொருளை இயேசு நமக்கு கற்பிக்கிறார். நாம் கிறிஸ்து இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமென்றால், நமது சிலுவையை சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர வேண்டும். அப்போது இயேசுவின் விருப் பப்படி நாம் இவ்வுலகில் இறையரசைக் கட்டியெழுப்ப முடியும்.