Friday, September 20, 2013

செப்டம்பர் 22, 2013

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
லூக்கா 16:1-13

   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "செல் வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப் பிட்டு, 'உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறி னார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், 'நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
   பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முத லாவது வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
    ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரிய வற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங் கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப் பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவ ரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப் பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''


சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். உவமையில் வரும் வீட்டுப் பொறுப்பாளர் மீது தலைவரின் உடைமைகளை வீணாக்கியதாக குற்றச்சாட்டு வருகிறது. அவர் வீட்டுப் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படுகிறது. சூழ்நிலையை உணர்ந்துகொண்ட அவர், மற்றவர்களின் மன தில் இடம் பெறுவதற்காக நன்மை செய்வதைக் காண்கிறோம். தன் முன்மதியால் தலைவ ரின் பாராட்டையும் அவர் பெற்றதாக இயேசு கூறுகிறார். நாமும் நமது பாவ நிலையை உணரும்போது, நமது நற்செயல்களால் கடவுளை நெருங்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும். நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு, நாம் நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டுமென ஆண்டவர் கூறுகிறார். அதேநேரத்தில் நிலையான உறைவிடமான விண்ணகத்தை அடையும் வழியைக் கண்டுணர நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் திருவுளத்தை நேரிய விதத்தில் நிறைவேற்றும்போது, நாம் அவரது நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ முடியும்.