Sunday, September 1, 2013

செப்டம்பர் 1, 2013

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
லூக்கா 14:1,7-14

   அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றி ருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: "ஒருவர் உங்களைத் திருமண விருந் துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத் தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற் குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களை யும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவ ருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட் டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களு டன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.''
   பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையா ளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, மற்றவர்கள் முன்னிலையிலும், கடவுள் முன்னிலை யிலும் நாம் பெருமை பெறுவதற்கான வழியைக் கற்றுத் தருகிறார். பிறர் முன்னிலையில் நாம் பெருமை அடைய விரும்பினால், நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்பதே இயேசு நமக்கு கற்பிக்கும் முதல் பாடம். கடைசி இடத்தில் அமர்ந்திருக்கும் நாம் முதல் இடத்துக்கு அழைக்கப்படும் வேளையில் பெருமை அடைவோம். அவ்வாறே இருப்பவர்க ளுக்கு விருந்து படைப்பதை விட, இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழுமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு நாம் மனிதர்களின் கைம்மாறைப் புறக்கணிக்கும்போது, ஆண்டவர் நமக்கு கைம்மாறு அளிப்பார். அப்போது நாம் கடவுளின் முன்னிலையில் மாட்சி பெறுபவர்களாக திகழ முடியும்.