Friday, August 23, 2013

ஆகஸ்ட் 25, 2013

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

லூக்கா 13:22-30

   அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித் துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப் பொழுது ஒருவர் அவரிடம், "ஆண்டவரே, மீட்புப் பெறு வோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். 'வீட்டு உரிமையா ளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, 'நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், 'நாங் கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ எனக் குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறை யாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற் கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இடுக்கமான வாயில் வழியாக வருந்தி நுழைய அழைப்பு விடுக்கிறார். பேராசை, சுயநலம் போன்ற தீமைகளின் மூட்டைகளை சுமந்துகொண்டு செல் லும்போது, நமக்கு பெரிய வாயில் தேவைப்படுகிறது. அத்தகைய வாயில் வழியாக நாம் நுழைந்தால், அது நம்மை அழிவுக்கு கொண்டு செல்லும். தீமைகளை விடுத்து நன்மை செய் வோராய் வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். கடவுளின் விருப்பத் துக்கு நம்மை முழுமையாக கையளித்து குழந்தைகளைப் போன்ற எளிய மனநிலையில் வாழும்போது, நாம் இடுக்கமான வாயில் வழியாக நுழைய முடியும். இயேசுவை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் அந்த வாயிலில் நுழைந்தால், ஆண்டவர் தரும் வாழ்வை நாம் பெற்றுக்கொண்டு இறையாட்சிப் பந்தியில் முதன்மையானவர்களாய் அமர முடியும்.