Friday, August 2, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு
லூக்கா 12:13-21

   அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக் கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதி யான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார்.
   அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: "செல் வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந் தது. அவன், 'நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில் லையே!' என்று எண்ணினான். 'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, 'என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல் வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவ ராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உலகப் பொருட்கள் மீது பற்று வைக்காமல் கடவுள் முன்னிலையில் செல்வம் மிகுந்தோராய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு தன் பொதுவாழ்வில் பல்வேறு ஆன்மீக, சமயம் சார்ந்த கேள்விகளுக்கு விடை அளிப்பதைக் காண்கிறோம். இயேசுவின் திறமையைக் கண்ட ஒருவர், அவரது சொத்து பிரச்சனையில் தலையிடுமாறு இயேசுவுக்கு அழைப்பு விடுக்கிறார். விண்ணரசைப் பற்றி போதிக்க வந்த இயேசு, மண்ணக சொத்துக்களில் பற்று வைக்க வேண்டாம் என்ற போதனையை வழங்கு கிறார். சேர்த்து வைக்கவும் இடம் இல்லாத அளவுக்கு அதிக விளைச்சலை காண்கிறது ஒரு செல்வனின் நிலம். அவன் அதைக் கொண்டு, பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம் எனத் திட்டமிடுகிறான். ஆனால் வாழ்க்கை அவன் கையில் இல்லை, கடவுளின் திட்டப்படி அவன் உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என இயேசு கூறுகிறார். எனவே உலக செல்வங்கள் மீது பற்று கொள்ளாமல் நன்மை செய்பவர்களாய் வாழும்போது, கடவுள் முன்னிலையில் செல் வம் உடையவர்களாய் திகழ முடியும்.