Friday, July 26, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு
லூக்கா 11:1-13

   அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண் டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்க ளுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார். அவர் அவர்க ளிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ் வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன் னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார்.
   மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவ ருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடி யாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட் டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல் கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெ னில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டு வோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப் பது எத்துணை உறுதி!''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்களுள் ஒருவர், செபிக்க (இறைவனிடம் வேண்ட) கற்றுக் கொடுக்குமாறு கேட்கிறார். உடனே இயேசு, இறைத் தந்தையை நோக்கி வேண்டல் செய்ய சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பதைக் காண்கிறோம். செபங்களில் சிறந்த செபமாக இது உள்ளது. இறைப்புகழ்ச்சி, இறையாட்சியை வரவேற்றல், உணவு, மன்னிப்பு, மீட்புக்காக வேண்டல் ஆகியவை இந்த செபத்தின் பாடமாக அமைந்துள்ளன. செபிக்க கற்றுக் கொடுக்கும் இயேசு, அதன் பயனையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்க ளுக்குத் திறக்கப்படும்" என்ற வாழ்க்கை பாடம் இங்கு கற்பிக்கப்படுகிறது. விடாமுயற்சியு டன் செபம் செய்தால் நாம் விரும்பும் நன்மைகளை உறுதியாக பெற்றுக்கொள்வோம் என்பதை இயேசு நமக்கு தெளிவுபடுத்துகிறார். இயேசு விரும்புவது போன்று நாம் தூய ஆவியைக் கேட்டு பெற்றுக்கொண்டால், கடவுளின் திருவுளத்தை இம்மண்ணில் நிறை வேற்றுபவர்களாக வாழ முடியும்.