Friday, July 19, 2013

ஜூலை 21, 2013

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
லூக்கா 10:38-42

   அக்காலத்தில் இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒரு வர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக் குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளி டம் சொல்லும்'' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியா -வோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது பற்றியப் பாடத்தைக் கற்றுத் தருகிறார். பெத்தானியாவில் உள்ள லாசரின் வீட்டுக்கு இயேசு செல் கிறார். அங்கு லாசரின் சகோதரிகளான மார்த்தாவும், மரியாவும் இருக்கிறார்கள். இயேசுவை வரவேற்றதும், அவருக்கு விருந்து படைக்கும் பணியில் மார்த்தா மும்முரமாக இறங்கு கிறார். மார்த்தாவுக்கு உதவி செய்யாமல், மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். மரியா மீதான தனது ஆதங்கத்தை, மார்த்தா, இயேசுவிடம் வெளிப்படுத்துகிறார். அனைத்தையும் செய்ய வல்ல ஆண்டவர் அரு கில் இருக்கும்போது, எதைப் பற்றியும் கலைப்படத் தேவையில்லை என்பதை மார்த்தாவுக்கு இயேசு தெளிவுபடுத்துகிறார். மரியாவைப் போன்று இறைவன் முன்னிலையில் அமர்ந்து, அவரது வார்த்தைக்கு செவிகொடுப்பது முக்கியம் என்பதே இயேசு கற்றுத்தரும் பாடம். ஆண் டவரின் திருவுளத்தை உவப்புடன் நிறைவேற்றும்போது, நமது வாழ்வை கவலையின்றி எதிர் கொள்ள முடியும்.