Friday, July 5, 2013

ஜூலை 7, 2013

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
லூக்கா 10:1-12,17-20

   அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப் பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகை யால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள் களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன் றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட் டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்பு கிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டி லேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்க ளுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறை யாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 'எங்கள் கால்களில் ஒட்டி யுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறை யாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்."
   பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர். அதற்கு அவர், "வானத்தி லிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு எழுபத்திரண்டு சீடர்களை நியமித்து, அவர்களைத் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்புவதைக் காண்கிறோம். ஆண்டவருக்குரிய அறுவடை மிகுதியாக இருந்தும், அதை செய்வதற்கு வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதாக இயேசு குறிப்பிடுகிறார். ஆண்டவரின் பணிக்காக அனுப்பப்பட இருப்பவர்களை, அதற்காக செபிக்கு மாறும் பணிக்கிறார். கடவுளுக்காக அறுவடை பணியை செய்பவர்கள், ஓநாய்களிடையே அனுப்பப்படும் ஆட்டுக் குட்டிகளை போன்று இருப்பதாக இயேசு விளக்குகிறார். கிறிஸ்து வுக்காக உழைப்பவர்கள் பிறருக்கு பயப்படத் தேவையில்லை; தங்கள் உழைப்புக்கேற்ற கூலிக்கு அவர்கள் உரிமை உடையவர்களே; கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோருக்கு அமை தியை வாக்களிக்கவும், அவரை புறக்கணிப்போருக்கு எதிராக தீர்ப்பளிக்கவும் நம் ஆண்டவர் அதிகாரம் அளித்துள்ளார். எழுபத்திரண்டு சீடர்களும், ஆண்டவரின் பெயரால் நோய்களை குணமாக்கியதையும், பேய்களை ஓட்டியதையும் இயேசுவிடம் பகிர்ந்துகொள்வதை இங்கு காண்கிறோம். நாம் கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து வாழும்போது, நம் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறதை குறித்து மகிழ்ச்சியடைய முடியும்.