Friday, June 21, 2013

ஜூன் 23, 2013

பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

லூக்கா 9:18-24

   அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கி றார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறுமொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கி றீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோ ரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப் படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவ ரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தந்தையாம் கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தவராய் பேசுவதைக் காண்கிறோம். தனது மரணத்துக்கு முன், தன்னை சீடர்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றனர் என்பதை சோதித்தறிகிறார். அவர்களைப் பற்றித் தனக்கு தெரியாது என்பதற்காக அன்று, தன்னைப் பற்றிய விழிப்பு ணர்வை சீடர்கள் பெறுவதற்காகவே இயேசு இந்த கேள்வியைக் கேட்கிறார். இவ்வளவு காலம் தன்னோடு இருந்தும், தன்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் வாழ்ந்திருப்பதை சீடர் கள் புரிந்துகொள்ளச் செய்கிறார். இயேசுவோடு இருந்தால் அற்புதங்களையும், அதிசயங் களையும் அனுபவிக்கலாம் என்று அலைந்து திரிந்த சீடர்களுக்கு தன் வாழ்வின் உண்மை நோக்கத்தை விளக்குகிறார். "மானிட மகன் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப் படவும் வேண்டும்." நம் ஆண்டவரைப் பின்பற்ற விரும்பும் எவரும் சிலுவையை தூக்கிக் கொண்டே அவரைப் பின்பற்ற முடியும். இயேசுவின் பொருட்டு உயிரை இழக்க முன்வரும் போது, அவர் தரும் வாழ்வை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.