Friday, June 14, 2013

ஜூன் 16, 2013

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு
லூக்கா 7:36-8:3

   அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம் மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரி சேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந் நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசே யருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்கு தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின் றார்; அவருடைய காலடிகளை தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
   அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்" என்றார். அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார். அப் பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடி யாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்" என்றார். இயேசு அவ ரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார்.
   பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத் தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடி களை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூச வில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.
   பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். "பாவங்களை யும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார்.
   அதற்குப் பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தி யைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின் றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமை களைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, பாவியான ஒரு பெண்ணின் பாவங்களை மன்னித்து புது வாழ்வு அளிப்பதைக் காண்கிறோம். இயேசு பரிசேயரான சீமோனுடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்ற செய்தியைக் கேட்ட அப்பெண், இயேசுவால் தனது வாழ்வை மாற்ற முடியும் என நம்புகிறார். அந்த நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், இயேசுவின் காலடிகளை கண்ணீரால் கழுவி கூந்தலால் துடைத்து, நறுமணத் தைலம் பூசுகிறார். இந்நிகழ்வு அப்பெண்ணின் மனமாற்றத்தை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அவர் தன்னை முழுவதுமே இயேசுவின் காலடிகளில் அர்ப்பணித்து இயேசுவின் இரக்கத் தைப் பெறுகிறார். அன்பின் வழியாக இயேசுவின் மனதை வென்றதால், அப்பெண்ணின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. துன்பச் சூழல்களால் நாம் கடவுளிடம் இருந்து விலகி இருந்தாலும், நம்பிக்கையோடும் அன்போடும் மீண்டும் அவரைத் தேடி வரும்போது, அவரது அன்பையும் மன்னிப்பையும் நாம் உணர முடியும்.