Friday, May 24, 2013

மே 26, 2013

மூவொரு இறைவன் பெருவிழா
யோவான் 16:12-15

   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்து வார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட் பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறி விப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறி விப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப் பார்'" என்றேன்.

சிந்தனை:
  இன்றைய நற்செய்தியில் இயேசு, மூவொரு இறைவனின் செயல்பாட்டை விளக்குகிறார். தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார். தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆட்களாக தம்மை வெளிப்படுத்தும் ஒரே இறைவன், மனித உருவில் தோன்றிய இயேசு வழியாக நமக்கு மீட்பு அளித்துள்ளார். மனித அறிவுக்கு புலப்படாத மாபெரும் மறைபொருளாக விளங் கும் மூவொரு இறைவனில் முழுமையான நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையால், கடவுளின் நிறைமாட்சியில் நாம் பங்குபெற முடியும்.