Friday, May 17, 2013

மே 19, 2013

தூய ஆவியாரின் வருகை பெருவிழா
யோவான் 14:15-16,23-26

   அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற் றொரு துணையாளரை உங்களுக்கு தருமாறு நான் தந்தை யிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடை யவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடை யவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத் தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, துணையாளராம் தூய ஆவியாரைப் பற்றி தம் சீடருக்கு கற்றுக் கொடுக்கிறார். தூய ஆவியாரின் தூண்டுதலால் நாம் தந்தையிடமும், மகனிடமும் அன்புகொள்ள கற்றுக் கொள்கிறோம். நாம் இறைவனை அன்பு செய்யும்போது, அவர் நம்மில் வந்து குடிகொள்வார். தூய ஆவியாரின் வருகையால் திருச்சபை தோன்றிய பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். தனது பெயரால் தந்தை அனுப்பும் துணையாளராம் தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் என்று ஆண்டவர் உறுதி அளித்திருக் கிறார். கிறிஸ்து கூறிய அனைத்தையும் நமக்கு நினைவூட்டும் தூய ஆவியாரின் செயலை நம்மில் அனுமதிக்கும்போது, இயேசுவைப் பற்றிய  உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் நாம் வாழ முடியும்.