Friday, March 1, 2013

மார்ச் 3, 2013

தவக்காலம் 3-ம் ஞாயிறு
லூக்கா 13:1-9
   அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழி யாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக் கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கி றீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார்.
   மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதை யும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டி விடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, நாம் மனம் மாறுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். உலகில் நிகழும் அழிவுகள் ஒவ்வொன்றையும் படிப்பினைகளாக எடுத்துக்கொண்டு, மனம் திரும்ப வேண்டுமென இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். உருமாற்றத்தின் மாட்சியைப் பெற நாம் மனமாற்றத்திற்கு அழைக்கப்படுகிறோம். பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலே யரை பிலாத்து கொன்றதையும், சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேர் உயிரி ழந்ததையும் சுட்டிக்காட்டி, மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர் கள் என இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். கனி தராத அத்தி மரத்தை வெட்டுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட்டதைப் போன்று, மனம் திரும்புமாறு நமக்கும் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் அழிவுக்கு ஆளாகாமல் இருக்க கடவுளால் நமக்கு தரப்பட்டுள்ள காலத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் எச்சரிக்கையை சரியாக புரிந்துகொள்ளும்போது, நாம் கடவுளுக்கு உகந்த முறையில் தூயவர்களாய் வாழ முடியும்.