Friday, March 8, 2013

மார்ச் 10, 2013

தவக்காலம் 4-ம் ஞாயிறு
லூக்கா 15:1-3,11-32
   அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல் வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்து கிறாரே'' என்று முணு முணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமை யைச் சொன்னார்: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக் கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண் டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.
    பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொ ழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்க ளுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்த வராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகு தியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம் முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
    தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதி யடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
    அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்து கொண் டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல் லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித் திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்ப ரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.
    அதற்கு தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந் தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்தும் ஓர் உவமையை எடுத்துரைக்கிறார். கடவுளின் அன்பை உதறிவிட்டு, உலகப் பொருட்களில் ஆர்வம் கொள் ளும் மனிதர்களை இளையமகன் குறித்து நிற்கிறார். தந்தையின் அன்பிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு அவர் தொலைநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது போலவே, உலகப் போக்கில் வாழும் மனிதர் ஒவ்வொருவரும் கடவிளிடம் இருந்து விலகிச் செல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் வெறுமையை உணரும்போது, தந்தையிடம் திரும்பிச் செல்லும் தூண்டுதலைப் பெறுகிறார்கள். ஆனால், உவமை கூறும் மகனைப் போல தந்தையிடம் திரும்பிச் செல்பவர்கள் சிலரே. அதே வேளையில், மனந்திரும்பி வரும் ஒவ்வொருவரையும் அரவணைத்துக் கொள்வதற்காக கடவுள் எதிர்நோக்கி காத்திருக்கிறார். மனம் மாறியவர்கள் தங்கள் தாழ்நிலையை அறிந்து, அடிமைகளாய் தங்களைக் கருதினாலும் அவர்களுக்கு பிள் ளைகளுக்குரிய உரிமையை கடவுள் மீண்டும் அளிக்கிறார். நமது பாவநிலையை உணர்ந்து, மனம் மாறியவர்களாக நாம் கடவுளிடம்  திரும்பிச செல்லும்போது அவர் ஏற்பாடு செய்யும் விருந்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்க முடியும்.