Friday, February 22, 2013

பிப்ரவரி 24, 2013

தவக்காலம் 2-ம் ஞாயிறு
லூக்கா 9:28-36
   அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டு வதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண் டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவரு டைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்த னர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறை வேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்க கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சி யோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
   அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண் டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்'' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார் கள். அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவ ருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி இயேசு உருமாற்றம் அடைந்த நிகழ்வை நமக்கு எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவின் உருமாற்றம் அவரது மாட்சியை வெளிப்படுத்தினாலும், இக்காட்சி யின் பின்னணியில் அவரது சிலுவை பாடுகளின் மறைபொருளை காண முடிகிறது. இயேசு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரோடு ஒரு மலைமீது வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியதாக நற்செய்தி கூறுகிறது. அப்போது, அங்கு தோன்றிய மோசேயும், எலியாவும், எருசலேமில் நிறைவேற இருந்த இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே, இயேசுவின் வழியாக தந்தை கடவுள் திட்டமிட்டிருந்த மீட்புத் திட்டம் நம் கண் முன் கொண்டு வரப்படுகிறது. அந்நேரத்தில், பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய், அதாவது இயேசுவின் சிலுவை மரணத்தைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்களாய் இருந்தார்கள். எனவேதான் பேதுரு, மாட்சியின் காட்சியை நிரந் தரமாக்க விரும்பி அங்கு கூடாரங்களை அமைக்கும் திட்டத்தை வெளியிடுகிறார். அந்த வேளையில், இறைத்தந்தையின் குரலை சீடர்கள் கேட்கிறார்கள்: "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்.'' நமது விருப்பத்திற்கு ஏற்ப செயல் படுவதில் அல்ல, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நிறைவு இருக்கிறது என்பதை உணரும்போது, நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் வாழ முடியும்.