லூக்கா 4:21-30
இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த
மறைநூல் வாக்கு இன்று நிறைவே றிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த
அருள்மொழி களைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக்
கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், 'மருத்துவரே, உம்மையே நீர்
குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழி யைச் சொல்லி, 'கப்பர்நாகுமில் நீர்
செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய
இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.
ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம்
சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது;
நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே
கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்
படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே
அனுப்பப்பட்டார்.
மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள்
பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை.
சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது'' என்றார்.
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
சிந்தனை:
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, இறைவாக்கினர் எவரும் தம்
சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். கடவுளின் பெய ரால் செய்யப்படும் இறைவாக்கு பணியின் சவால்கள் இன்றைய நற்செய்தியில் எடுத்துரைக் கப்படுகின்றன. எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிவிட்டது என்று இயேசு கூறியவுடன், ஏதோ ஓர் அற்புதம் நிகழ்ந்துவிட்டதாக எண்ணிய மக்கள் அவரைப் புகழ்கிறார்கள். அடுத்த தாக தங்கள் நடுவே அற்புதம் நிகழப்போகிறது என்று நினைத்திருந்த வேளையில், அப்படி எதுவும் நிகழப்போவதில்லை என்று இயேசு கூறியது அவர்களுக்கு பேரிடியாக இருந்தது. இதனால் வெகுண்டெழுந்த அவர்கள் இயேசுவைக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.
ஆனால் அந்த கொள்கையற்ற மக்கள் கூட்டத்தின் நடுவில் நடந்து சென்று, இயேசு நழுவிப் போய்விடுகிறார். முழு மனதோடு இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது திட்டத்தை புரிந்துகொண்டு தெளிவான பாதையில் நம் வாழ்வை முன்னெடுத்து செல்ல முடியும்.