Tuesday, January 1, 2013

ஜனவரி 1, 2013

புனித கன்னி மரியா இறைவனின் தாய் பெருவிழா

லூக்கா 2:16-21
   அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தி யிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தை யைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித் தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப் படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட வாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
   குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல் லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.