Friday, September 7, 2012

செப்டம்பர் 9, 2012

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
மாற்கு 7:31-37
   அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழி யாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலே யக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுப வருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்து குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்து சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவரு டைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
   இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவ ரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற் றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக்கொண்டார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒரு வரை குணப்படுத்துகிறார். இயேசுவின் சொல்லிலும் செயலிலும் வல்லமை வெளிப்பட்டு ஓர் அற்புதம் நிகழ்வதைக் காண்கிறோம். அந்த காத்து கேளாதவரைக் கூட்டிச் சென்றவர்கள், மற்றவர்களின் பேச்சைக் கேட்டு இயேசுவிடம் சென்றிருக்க வேண்டும். எனவேதான், இயேசு வின் புதுமையைக் கண்டு வியப்படைகிறார்கள். அதன் தாக்கம் அவர்களது செயலில் வெளிப்படுகிறது. இயேசுவின் கட்டளையையும் மீறி அவர்கள் ஊரெங்கும் சென்று பரவும் வகையில் அதை அறிவித்தார்கள் என்று காண்கிறோம். நாமும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கும்போது, அவரது மாட்சியை இந்த உலகம் உணரச் செய்ய முடியும்.