Friday, September 14, 2012

செப்டம்பர் 16, 2012

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு
மாற்கு 8:27-35
   அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியா வைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல் கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். 'மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர் கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்' என்று இயேசு அவர்க ளுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவு ளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
   பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின் பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடு வார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னைப் பற்றி பிறர் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை சீடர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதைக் காண்கிறோம். மக்களின் உள்ளத்தையும், எண்ணங்களையும் அறிந்திருந்த இயேசு அவற்றை சீடர்களின் வாய்மொழி யாக கேட்டறிந்ததில் ஒரு நோக்கம் இருக்கிறது. தான் உலகிற்கு வந்ததன் நோக்கத்தை சீடர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றே இயேசு சீடர்களிடம் கேள்வி எழுப்புகிறார். பேதுரு இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்டாலும், அவரை இவ்வுலக அரசுக்குரியவ ராகவே பார்க்கிறார். ஆனால் இறையாட்சியை உலகில் நிறுவ வந்த இயேசு துன்பங்களை ஏற்பதன் அவசியத்தை சீடர்களுக்கு உணர்த்துகிறார். நம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடரும்போது, நாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.