Friday, September 21, 2012

செப்டம்பர் 23, 2012

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
மாற்கு 9:30-37
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப் பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கி றார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப் பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
   அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று அவர்களிடம் கேட் டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட் டும்'' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது எப்படி என்பதைப் பற்றி சீடர்களுக்கு கற்பிக்கிறதைக் காண்கிறோம். இயேசு தனது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைப் பற்றி சீடர்களுக்கு முன்னறிவிக்கிறார். ஆனால் அவரது வார்த் தைகளைப் புரிந்துகொள்ள சீடர்கள் தயாராக இல்லை. ஏனெனில், இயேசு அரசரானால் யார் என்ன பதவிக்கு வர முடியும் என்பதைப் பற்றிய சிந்தனையில் அவர்கள் இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கப்பர்நாகுமுக்கு செல்லும் வழியில் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் நடக்கிறது. இதனை அறிந்த இயேசு, பெரியவராக அதிகாரத்தில் இருக்க விரும்பு கிறவர் முதலில் பணிவிடை செய்ய தயாராக இருக்க வீண்டும் என்று அறிவுறுத்துகிறார். கிறிஸ்துவின் பெயரால் நாம் பிறரை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் விண்ணக தந்தைக்கு உகந்தவர்களாக மாற முடியும்.