Friday, August 24, 2012

ஆகஸ்ட் 26, 2012

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு
யோவான் 6:60-69
   அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப் பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப் பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவி யைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், "இதன் காரணமாகத் தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக் குக் கூறினேன்'' என்றார்.
   அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவ ரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கி றீர்களா?'' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவு ளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், அதில் உள்ள உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாததால் அவரிடம் இருந்து விலகிச் சென்றதை காண் கிறோம். வார்த்தையான இறைவனின் வார்த்தைகள் யூத மக்களுக்கு கசப்பாக தெரிகின்றன. இயேசுவின் வார்த்தைகளில் இருந்த ஆன்மீக ஆழத்தைக் காணும் மனநிலை அவர்களிடம் இல்லை. கடவுளின் மறைபொருள் நமக்கு புரியாததாக இருந்தாலும், அதன் உண்மை கசப் பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். ஏனெனில் ஆண்டவ ரின் வார்த்தைகள் வாழ்வு தருபவையாக உள்ளன. பேதுருவைப் போல ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும் மனநிலையைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் உண்மை வாழ்வைக் கண் டடைய முடியும்.