Friday, August 10, 2012

ஆகஸ்ட் 12, 2012

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
யோவான் 6:41-51
   அக்காலத்தில் "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவ ருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தை யும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படிச் சொல்லலாம்?" என்று பேசிக் கொண்டார்கள்.
   இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னி டம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய் யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற் காகவே கொடுக்கிறேன்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை விண்ணகத்தில் இருந்து வந்தவர் என்று கூறியதால், யூதர்கள் முணுமுணுப்பதைக் காண்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் கள் தயங்குகிறார்கள். இயேசுவை ஒரு சாதாரண மனிதரராகவே பார்த்து பழகியவர்களுக்கு, அவரை விண்ணில் இருந்து வந்தவராக, அதாவது இறைமகனாக ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. நம்மோடு இருக்கிற இவர் நம்மைவிட உயர்ந்தவராக இருக்க முடியாது என்று அவர்கள் நினைக்கின்றனர். இயேசுவோ தன்னில் நம்பிக்கை கொள்வோருக்கு நிலை வாழ்வை வாக்களிக்கிறார். விண்ணகத்தில் இருந்து வந்த இயேசுவே நிலைவாழ்வு தரும் உணவு என்பதை முழுமையாக நம்ப நாம் அழைக்கப்படுகிறோம். நற்கருணையில் இயேசு வின் சதையை உண்ணும் பேறுபெற்ற நாம், அவரில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் போது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.