Friday, June 1, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா
மத்தேயு 28:16-20

   அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென் றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகி லும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்க ளினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவி யார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

சிந்தனை:
  ஒரே கடவுள், மூன்று இறையாட்களாக செயல்படுகிறார் என்ற மாபெரும் மறைபொருளை இன்று நாம் கொண்டாடுகிறோம். மனித உடலெடுத்து நம்மோடு வாழ்ந்த இறைமகன் இயேசுவே இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். மனிதரின் சாதாரண அறிவுக்கு புரியவில்லை என்பதால், நாம் இதை மறுக்க முடியாது. கடவுள் நமது அறிவுக்கு அப்பாற்பட்டவர். தந்தை, மகன், தூய ஆவியார் என்று செயலாற்றும் மூவொரு இறைவ னுக்கு உண்மையுள்ளவர்களாக வாழும்போது, நாம் அவரது பிள்ளைகளாக மாற முடியும்.