Friday, June 15, 2012

ஜூன் 17, 2012

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு
மாற்கு 4:26-34

   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறி யது: "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிட லாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர் கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது'' என்று கூறினார்.
   மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும் பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்ட பின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்'' என்று கூறினார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர் களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையாட்சியின் தன்மையை உணர்த்தும் இரண்டு உவமைகளைத் தருகிறார். தானாகவே முளைத்து வளரும் சில பயிர்களைப் போன்று தாமாகவே கடவுளைத் தேடிவரும் மனிதர்களாலும், கடுகு விதையைப் போன்று இறைவனே நட்டு வளர்க்கும் திருச்சபையாலும் இறையாட்சி வளர்ச்சி அடைகிறது என்பதை இந்த உவமைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருச்சபையின் மக்களாக இருக்கும் நாம், கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நன்மைகள் செய்து வாழும்போது இறையாட்சியின் தூதுவர்களாக விளங்க முடியும்.