Friday, May 25, 2012

மே 27, 2012

தூய ஆவியாரின் வருகை பெருவிழா
யோவான் 15:26-27,16:12-15

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங் களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்க முதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நான் உங்களிடம் சொல் லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.''

சிந்தனை:
   இயேசு வாக்களித்த தூய ஆவியாரின் வருகையால் திருச்சபை தோன்றிய நாள் இது. தூய ஆவியாரின் செயலால், இயேசுவைப் பற்றிய  உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவிடம் இருந்து கேட்பவற்றை பேசுகின்ற தூய ஆவியார் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போது, தந்தையின் வலப்பக்கத்தில் மாட்சியுடன் வீற்றி ருக்கும் இயேசுவின் சாட்சிகளாக நாம் வாழ முடியும். தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவை நம்மில் வெளிப்படும்போது நமது சான்று மிகுந்த பலன் தருவதாக அமையும்.