Friday, October 12, 2012

அக்டோபர் 14, 2012

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
மாற்கு 10:17-30
  அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த போது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள் படியிட்டு, "நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக் கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவ ரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல் லவா? 'கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக் காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'' என்றார். அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
   இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படு வது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடு களையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளை களையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுக ளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்வதைப் பற்றி கேள்வி எழுப்புவதைக் காண்கிறோம். பிற ருக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தும் கட்டளைகளை கடைபிடிக்கு மாறு அவரிடம் இயேசு கூறுகிறார். தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடித்து வருவ தாக இளைஞர் கூறியதும், அதற்கும் மேலான ஒன்றை செய்யுமாறு இயேசு கூறுகிறார்; அவரிடம் உள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடுக்குமாறு பணிக்கிறார். ஒருவரிடம் இருக் கின்ற செல்வத்தின் அளவு அதிகரிக்கும்போது, பிறருக்கு உதவ வேண்டிய பொறுப்பும் அதி கரிக்கிறது என்பதை இயேசு இங்கு சுட்டிக் காட்டுகிறார். கடவுளுக்காக நாம் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டுமென இயேசு அழைப்பு விடுக்கிறார். உலக இன்பங்களை புறக்கணித்து, ஆண்டவருக்காக சில இன்னல்களை ஏற்றுக்கொள்ளும்போது நாம் நிலைவாழ் வினை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.