Friday, July 6, 2012

ஜூலை 8, 2012

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
மாற்கு 6:1-6

   அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், "இவருக்கு இவை யெல்லாம் எங்கிருந்து வந் தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கி றார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக் கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயங்குவதைக் காண்கிறோம். அவர்களது நம்பிக்கையின்மை இயேசுவை புதுமைகள் செய்ய விடாமல் தடுக்கிறது. நாம் பிறர் இருக்கும் நிலையிலேயே அவர்களை ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கையால் புதுமைகளைக் காணவும் அழைக்கப்படுகிறோம். ஏற்றுக்கொள்ளுதல், நம் பிக்கை ஆகிய இரு மதிப்பீடுகளை இன்றைய நற்செய்தி நமக்கு போதிக்கிறது. நம்பிக்கை யோடு நாம் கடவுளையும் பிறரையும் ஏற்றுக்கொள்ளும்போது, நமது வாழ்வில் புதுமை களைக் காண முடியும்.