Friday, July 20, 2012

ஜூலை 22, 2012

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
மாற்கு 6:30-34

   அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலை நிலத் திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவ துமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
   அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர் களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களி லிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தனது சீடர்களை ஓய்வெடுக்க சொல்கிறார். உழைப்ப வர்கள் அனைவருக்கும் ஒய்வு தேவை. கிறிஸ்து அனுப்பிய பணியாளர்கள், தங்கள் பணிக்கு பின் ஒய்வெடுக்கின்றனர். பணியாளர்கள் ஓய்வில் இருந்தாலும், ஆண்டவர் இயேசு ஓய் வெடுக்கவில்லை. அவர் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப் போன்று இருப்பதைக் கண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். மக்களை நல்வழிப்படுத்த ஆண்டவர் எப்பொழுதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார். ஆயர்கள் மந்தையை சிதறடிக்கும்போது, அவர் புதிய ஆயர்களை அனுப்புவதுடன் தாமும் இரக்கமுள்ள ஆயராக செயல்படுகிறார். இறைவன் நமக்கு தந்துள்ள ஆயர்கள் (திருப்பணியாளர்கள்) வழியாக, அவர் நம்மை வழிநடத்துவார். அவர்களை ஏற்று ஆண்டவரின் அரவணைப்பில் வாழும்போது, நாம் அவருக்கு உண்மை யான சாட்சிகளாக திகழ முடியும்.