Friday, July 13, 2012

ஜூலை 15, 2012

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
மாற்கு 6:7-13

   அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவ ழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங் கினார். அவர்களுக்கு தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித் தார். மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளா மலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கி ருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையரசைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க தனது சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். அவர்களுக்கு நோய்களை குணமாக்கவும், பேய்களை ஓட்டவும் அதிகாரம் அளித்து, ஒருவருக்கு துணையாக மற்றொருவரை அனுப்பு கிறார். சீடர்கள் இயேசுவில் நம்பிக்கை கொண்டவர்களாக பல வல்ல செயல்களை செய் கிறார்கள். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது பணியை செய்ய அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழும்போது நாமும் இயேசுவுக்கு சான்று பகர்பவர்களாக வாழ்வோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உறு துணையாக செயல்படும்போது, மற்றவர்கள் நடுவில் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும்.