யோவான் 15:9-17
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியது: "என்
தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு
கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத் திருங்கள். நான் என் தந்தையின்
கட்டளைகளைக் கடைப் பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும்
என் கட்டளைகளை கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத் திருப்பீர்கள். என்
மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை
உங்களிடம் சொன் னேன். 'நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும்
ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண் டும்' என்பதே என் கட்டளை."
"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை."
"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை."
சிந்தனை:
இயேசுவே தந்தை இறைவனின் அன்பை இந்த உலகிற்கு வெளிப்படுத்தினார். இயேசு தந்தையின் அன்பில் நிலைத்திருப்பது போல, நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அன்பு கட்டளைகளை நம் வாழ்வில் செயல்படுத்தும் போது, நாம் அவரது அன்பில் நிலைத்திருக்க முடியும். நமக்காக தன் உயிரையே கையளித்த நமது அன்பு நண்பர் இயேசுவின் கட்டளைகளை நாம் பின்பற்றும்போது, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து இம்மண்ணில் இறையரசைக் கட்டியெழுப்ப முடியும்.