Friday, March 2, 2012

மார்ச் 4, 2012

தவக்காலம் 2-ம் ஞாயிறு
மாற்கு 9:2-10
   அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர் களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரு டைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளி வீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண் டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெ னில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். 
   அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், 'மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத் துரைக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

சிந்தனை:
   இயேசு கிறிஸ்து தனது சாவை முதல் முறை முன்னறிவித்தப் பின் உருமாற்றம் அடைகிறார். சீடர்கள் முன்பாக அவர் தனது இறை மாட்சியை வெளிப்படுத்துகிறார். திருச் சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறுவதை இக்காட்சி நமக்கு உணர்த்து கிறது. இறைத்தந்தையின் ஒரே மகனுடைய வார்த்தைகளுக்கு செவிசாய்த்தால் நாமும் இத்தகைய  இறை மாட்சியில் பங்குபெற முடியும்.