Friday, March 23, 2012

மார்ச் 25, 2012

தவக்காலம் 5-ம் ஞாயிறு
யோவான் 12:20-33
   அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோ ருள் கிரேக்கர் சிலரும் இருந் தனர். இவர்கள் கலிலேயா விலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கேட்டுக் கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயா விடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.
   இயேசு அவர்களைப் பார்த்து, "மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண் ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்'' என்றார். மேலும் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்க முற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக் கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்'' என்றார்.
   அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்'' என்று ஒலித்தது. அங்கு கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, "அது இடிமுழக்கம்'' என்றனர். வேறு சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு'' என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்'' என்றார். தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

சிந்தனை:
   சத்தான மண்ணில் விதை மடியும்போது, புதிய பயிர் தோன்றி பல மடங்கு விளைச்சலைத் தருகிறது. அவ்வாறே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் ஒவ்வொருவரும் மடியும்போது, பல மடங்கு பலனளிக்க முடியும். நாம் கடவுளுக்கு உகந்த வகையில் பலன் தரும்போது, நம் ஆண்டவர் இயேசுவின் வழியாக தந்தையாம் இறைவனை மாட்சிப்படுத்துகிறோம். கிறிஸ்து அளிக்கும் மீட்பையும் நாம் உரிமையாக்கிக் கொள்கிறோம்.