Friday, February 24, 2012

பிப்ரவரி 26, 2012

தவக்காலம் முதல் ஞாயிறு
மாற்கு 1:12-15
   அக்காலத்தில் தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய் யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறை வேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.

சிந்தனை:
   இயேசு கிறிஸ்து தனது இறையாட்சிப் பணியைத் தொடங்கும் முன்பு சோதனைக்கு உள்ளானார். இறையாட்சியில் பங்குபெற விரும்பும் அனைவருமே சோதனைக்கு உட்படத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கடவுள் தரும் மீட்பை உரிமையோடு பெற்றுக் கொள்ள முடியும்.