Sunday, January 1, 2012

ஜனவரி 1, 2012

இயேசுவின் வழியாக கடவுள் விடுக்கும் அமைதியின் அழைப்புக்கு செவிகொடுங்கள் - திருத்தந்தை

   இன்றைய நாள் தொடங்கிய வேளையில், உரோம் தூய பேதுரு பேராலயத்தில் புத்தாண்டின் முதல் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மரியா இறை வனின் தாய் பெருவிழா பற்றியும் உலக அமைதி நாள் பற்றியும் மறையுரை வழங்கினார்.
   "மரியா திருச்சபையின் தாயாகவும் எடுத்துக் காட்டாகவும் இருக்கிறார். அவர் விசுவாசத்தினால் இறை வார்த்தையை பெற்று, தன்னை கடவுளுக்கு அர்ப்பணித் தார். மரியாவைப் போன்றே, அன்னையாம் திருச்சபையும் கடவுளின் கடவுளின் ஆசிகளுக்கு இடைநிலையாளராக விளங்கு கிறாள்: அவள் இயேசுவைப் பெறுவதில் அதைப் பெற்று, இயேசுவைப் பெற்றெடுப்பதில் அதை வழங்குகிறாள். அவர் உலகினால் வழங்க முடியாத இரக்கமாகவும் அமைதி யாகவும் இருக்கிறார்; அப்பத்தின் அளவிலாவது உலகிற்கு அது தேவைப்படுகிறது" என்று திருத்தந்தை கூறினார்.
   "இளையோரை நீதியிலும் அமைதியிலும் பயிற்றுவித்தல்" என்ற மையக்கருத்தில் உலக அமைதி நாளுக்கான செய்தியை வழங்கிய பாப்பிறை, "இந்த காலத்தில், தொழில்நுட்ப அறிவில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நிழல்களின் முகத்தில் தெளிவற்றதாக உள்ள இன்றைய உலகின் அடிவானத்தில், நம்பிக்கை உள்ள எதிர்காலத்தை காண உண்மையின் அறிவிலும், அடிப்படை மதிப்பீடுகளிலும், புண்ணியத் திலும் இளையோரைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்த கல்வியில், நீதியிலும் அமைதியிலும் உருவாக்குதலும் இடம்பெற வேண்டும்" என்று உரைத்தார்.
   திருப்பாடல் 84ஐக் மேற்கோள் காட்டி தனது மறையுரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், "தன் மகன் இயேசு கிறிஸ்துவில் கடவுள் நம்மோடு பேசியிருக்கிறார்... அக்குரல் அமைதியைப் பற்றி பேசுகிறது... கடவுள் கூறுவதற்கு செவி கொடுங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.